சென்னை : வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், கடலோர மாவட்டங்களில், இன்று(ஜன.,28) மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் கடலோரம் அல்லாத உள் மாவட்டங்களில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்யும்.
தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும், 29, 30ம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில், இன்று மணிக்கு 45 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE