வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
குருதாஸ்பூர்: பஞ்சாபிற்குள் ஹெராயின் கடத்த முயன்ற பாகிஸ்தான் கடத்தல்காரர்களின் முயற்சியை எல்லை பாதுகாப்பு படையினர்(பிஎஸ்எப்) முறியடித்தனர். 47 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில், எல்லையில் அமைந்துள்ள சந்து வடாலா சோதனைச்சாவடி அருகே இன்று(ஜன.,28) அதிகாலை 5:15 மணிக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாட்டம் காணப்பட்டதை பிஎஸ்எப் வீரர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். கடத்தல்காரர்களும் சுட துவங்கினர். இறுதியில் கடத்தல்காரர்கள் தங்களிடம் இருந்த அனைத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர். இந்த மோதலில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் காயமடைந்தார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் இருந்து 47 பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த தலா ஒரு கிலோ ஹெராயின், 7 பாக்கெட்களில் இருந்த ஒப்பியம் போதைப்பொருள், தோட்டாக்கள், சீன துப்பாக்கி, வெடிமருந்துகள், ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE