மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் முன்பு முறைகேடாக வாகன பதிவு செய்ததை கண்டித்து இளைஞர் ஒருவர் விஷம் அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
மயிலாடுதுறை மாவட்டம் முத்தூர், அகரஆதனூரை சேர்ந்த விவசாயி மதன்மோகன்,35. இவர் தனக்கு சொந்தமான இரண்டு டிராக்டர்களுக்கும் முறைகேடாக வாகன பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து எஸ்பி, மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை அடுத்து தனது தாய் உமா மகேஸ்வரியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதன் பிறகு இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள படாததால் மனமுடைந்த மதன்மோகன் இன்று மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் முன்பு விஷம் அருந்தியடன், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது இந்த முடிவிற்கு காரணம் மயிலாடுதுறை மாஜி ஆர்டிஓ சண்முகவேல் மற்றும் இன்னாள் ஆர்டிஓ ராம்குமார் ஆகியோரே காரணம் என குற்றச்சாட்டு கோஷங்கள் எழுப்பினார்.
தொடர்ந்து அரை மயக்க நிலைக்குச் சென்ற சென்ற மதன் மோகனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி சென்று சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE