மும்பை: மஹாராஷ்டிர அரசு சூப்பர்மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை செய்ய அனுமதித்துள்ளது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதன் மூலம் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என காரணம் கூறியுள்ளார் சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்.
![]()
|
மஹாராஷ்டிர அரசு நேற்று (டிச., 27) மாநிலம் முழுவதும் உள்ள சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் இதர பெரிய கடைகளில் 5,000 ரூபாய் ஆண்டு உரிமக் கட்டணத்தில் மதுவை விற்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்திய ஒயின் தயாரிப்பாளர்களுக்கு அதிகளவில் சந்தைப்படுத்தல் வாய்ப்பை உறுதி செய்வது நோக்கம் என அமைச்சரவை தெரிவித்தது.
![]()
|
இம்முடிவை பா.ஜ.க., தலைவரும், மஹா., முன்னாள் முதல்வருமான பட்னாவிஸ் கடுமையாக எதிர்த்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலத்தை மது மாநிலமாக மாற்ற சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி விரும்புகிறது என்றார். இதற்கு பதிலளித்துள்ள சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், 'ஒயின் மதுபானம் கிடையாது. ஒயின் விற்பனை அதிகரித்தால் விவசாயிகள் பயனடைவார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இதைச் செய்துள்ளோம்.' என புதுவகையான விளக்கம் அளித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement