திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை இன்று நடைபெற உள்ளது.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று, பூதேவி, ஸ்ரீதேவி சமேத, உற்சவர் வீரரராகவர், ஹம்ச வாகனத்திலும், சூரிய பிரபை வாகனத்திலும் உள்பிரகாரத்தில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவையை முன்னிட்டு, இன்று காலை 5:00 மணிக்கு கோபுர தரிசனமும், உள்புறப்பாடு 7:30 மணிக்கும் நடக்கிறது. மாலை, ஹனுமந்த வாகனத்தில் வீரராகவர் உள்புறப்பாடு நடக்கிறது.பிரம்மோற்சவத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, தை அமாவாசை 31ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், ரத்னாங்கி சேவை, நாச்சியார் திருக்கோலத்தில், வீரராகவ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.தேரோட்டம், 2ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, வீரராகவர் கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE