முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் ஏழு கட்டமாக நடக்கிறது.
பிரசாரம்
இத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய லோக்தள் கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: முசாபர் நகரில் நானும், ராஷ்ட்ரீய லோக்தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் பிரசாரம் செய்யவும், பத்திரிகையாளர்களை கூட்டாக சந்திக்கவும் திட்டமிட்டிருந்தோம்.இதற்காக ஹெலிகாப்டரில் முசாபர்நகருக்கு சென்றேன். ஆனால் டில்லியில் என் ஹெலிகாப்டர் தடுத்து நிறுத்தப்பட்டு, முசாபர் நகருக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதறகான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பா.ஜ., தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தோல்வி பயத்ததில் என் பிரசாரத்தை முடக்க பா.ஜ., செய்யும் சதிதான் இது. இவ்வாறு அகிலேஷ் கூறினார்.இதற்கிடையே உ.பி., தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார்.
மீண்டும் வாய்ப்பு
இத்தொகுதியில் ஆதித்யநாத்தை ஆதரித்து, அவரது ஹிந்து யுவ வாஹினி அமைப்பு தீவிர பிரசாரம் செய்து வருகிறது.உ.பி. தேர்தலில் மேலும் 91 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பா.ஜ., அறிவித்தது. இதில் 13 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE