சென்னை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால், 300 கோடி ரூபாய் வார்த்தகம் பாதிக்கப்பட்டது.
சென்னையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள், நுங்கம்பாக்கத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதுகுறித்து, கூட்டு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆனந்த் பேசியதாவது:பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு 54 மாதங்களாக நிலுவையில் உள்ளது.
இந்த ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.பொது இன்சூரன்ஸ் தனியார் மய சட்டத் திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதை செயல்படுத்தக் கூடாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
நாடு முழுதும், அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களான நியூ இந்தியா இன்சூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் 50 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 5,000 பேர் பங்கேற்றனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக, நாடு முழுதும் 300 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement