கூடலுார்:முதுமலை, மசினகுடி அருகே, பசுவை கொன்ற புலியை, வனத்துறையினர் 10 இடங்களில் தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி மாவனல்லா குடியிருப்பு பகுதியில், இரவு, அப்பாஸ் என்பவரின் பசுவை, புலி தாக்கி கொன்றது.
மக்கள் கூறுகையில், 'கூடலுார் மற்றும் மசினகுடியில் மூன்று மாதங்களுக்கு முன், 16க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் நான்கு பேரை கொன்ற, 'டி - 23' புலியை, 21 நாட்கள் தேடுதலுக்கு பின், வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.'தற்போது, இப்பகுதியில் மீண்டும் ஒரு புலி, பசுமாட்டை கொன்றுள்ளது. தொடர்ந்து கால்நடைகளை தாக்கும் அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'புலியின் நடமாட்டத்தை அறிய, 10 இடங்களில் கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் இரவில் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி மாவனல்லா குடியிருப்பு பகுதியில், இரவு, அப்பாஸ் என்பவரின் பசுவை, புலி தாக்கி கொன்றது.
மக்கள் கூறுகையில், 'கூடலுார் மற்றும் மசினகுடியில் மூன்று மாதங்களுக்கு முன், 16க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் நான்கு பேரை கொன்ற, 'டி - 23' புலியை, 21 நாட்கள் தேடுதலுக்கு பின், வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.'தற்போது, இப்பகுதியில் மீண்டும் ஒரு புலி, பசுமாட்டை கொன்றுள்ளது. தொடர்ந்து கால்நடைகளை தாக்கும் அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'புலியின் நடமாட்டத்தை அறிய, 10 இடங்களில் கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் இரவில் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement