சென்னை:ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க, இன்றுடன் சேர்த்து மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், இதுவரை 4.32 லட்சம் கார்டுதாரர்கள் வாங்காமல் உள்ளனர்.
தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு, 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. அவற்றின் வினியோகம் ரேஷன் கடைகளில் இம்மாதம் 4ம் தேதி துவங்கியது.இம்மாதம் 13 வரை பொங்கல் பரிசு வழங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், கடைகளுக்கு பொருட்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. நேற்று வரை 2.11 கோடி கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கியுள்ளனர். இது, மொத்த கார்டுதாரர்களில் 97.99 சதவீதம். இன்னும் 4.32 லட்சம் பேர் வாங்காமல் உள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement