சென்னை:திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு இரண்டு பக்தர்கள் தலா, ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை, தி.நகர் வெங்டேஸ்வர பெருமாள் கோவிலில் சமர்ப்பித்தனர்.
சென்னையை சேர்ந்தவர் முனி ஸ்ரீனிவாசுலு ரெட்டி. இவரும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத பக்தர் ஒருவரும், நேற்று சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்டேசப் பெருமாள் கோவிலுக்கு சென்றனர்.
இருவரும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, தலா ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை, காணிக்கையாக தமிழக ஆலோசனைக் குழு தலைவர் சேகர் முன்னிலையில், தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனிடையே, தமிழக ஆலோசனைக் குழுவில், 24 பேரை உறுப்பினர்களாக, திருப்பதி தேவஸ்தானம் நியமித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement