சென்னை:'கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில், தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்பட்டால், அதை பார்த்து கொண்டு, பா.ஜ., அமைதியாக இருக்காது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:தமிழக காவல் துறை தன்னுடைய பெருமையையும், கண்ணியத்தையும் துறந்து, தி.மு.க.,வின் கைப்பாவையாக செயல்படுவதை, மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறது. அதற்கு உதாரணமாக, சமீபத்தில் எல்லா பத்திரிக்கைகளிலும், 130க்கும் மேற்பட்ட ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை மேற்கொள்காட்டி, 'சுதந்திரத்திற்கு முன் கூட, இப்படி அடக்குமுறை நடந்ததில்லை.
'உள்ளாட்சியிலாவது நல்லாட்சி மலர வேண்டும்' என்று, பா.ஜ., இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அந்த பதிவில் எந்தவிதமான கண்ணிய குறைவான வாசகங்களோ, மத கலவரம் துாண்டும் செய்திகளோ இல்லை. அவர்கள் செய்யும் தவறை பொது மக்கள் சுட்டிக் காட்டுவதை, தி.மு.க., விரும்பவில்லை என்பது வெளிச்சமாகிறது.
வினோஜ் செல்வம் பதிவையும், வழக்குப்பதிவையும் மேற்கோள்காட்டி, 'இதுபோல பதிவிடும் பொது மக்களை 'அரெஸ்ட்' செய்வோம்' என்று சென்னை காவல் ஆணையர் கடிதம் வெளியிட்டு உள்ளார். இது, அச்சுறுத்தலா அல்லது அத்துமீறலா?நடவடிக்கை எடுத்தால் வினோஜ் செல்வத்திற்கு பா.ஜ., துணை நிற்கும். கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில், தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்பட்டால், அதை பார்த்து கொண்டு, பா.ஜ., அமைதியாக இருக்காது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement