சென்னை:''மாநகராட்சி அதிகாரியை தாக்கிய கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிந்து, காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி: திருவொற்றியூர் எம்.எல்.ஏ., - கே.பி.சங்கர், மாநகராட்சி உதவிப் பொறியாளர், ஒப்பந்ததாரரை அடித்துள்ளார். அதற்காக, அவர் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி பதவி பறிப்பு என்பது கண் துடைப்பு.அவர் மீது வழக்கு பதிவு செய்து, காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், எதிர்காலத்தில் இதுபோன்ற அராஜகங்கள் செய்ய, ஆளும் கட்சியினர் தயங்குவர்.
விளாத்திகுளம் எம்.எல்.ஏ., தொழில் நிறுவனங்களை மிரட்டியுள்ளார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சட்டத்தை மீறி செயல்படுகின்றனர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றால், சென்னையில் ஒருவர் கூட வீடு கட்ட முடியாது. ஒப்பந்ததாரர்கள் பணி செய்ய முடியாது. கமிஷன் கேட்டு மிரட்டுவர்.
பொங்கல் பரிசு தொகுப்பில் 500 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது.எனவேதான் சி.பி.ஐ., விசாரணை கேட்கிறோம். தி.மு.க., மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. அ.தி.மு.க., மக்கத்தான வெற்றி பெறும். தேர்தலில் எங்களுடன் சேரும் கட்சிகளுக்கு லாபம். இவ்வாறு ஜெயகுமார் தெரிவித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement