மதுரை:'தினமலர்' செய்தி எதிரொலியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கல்வித்துறையில் நடக்கும் ஆசிரியர் கலந்தாய்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாறுதல் பெற்றவர்களுக்கு பிப்.,24 வரை பணிவிடுப்பு வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.,19 நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அந்தந்த மாவட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் பட்டியல் மாவட்ட தேர்தல் பிரிவில் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் ஜன., 24 துவங்கி பிப்.,23 வரை நடக்கும் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் வேறு மாவட்டங்களுக்கு ஆசிரியர்கள் மாறி செல்லும் நிலையில், ஏற்கெனவே பணியாற்றிய மாவட்டத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் பணிக்கு யாரை நியமிப்பது என்ற சர்ச்சை எழுந்தது.
புதிய பட்டியல் தயாரிக்கவும் காலஅவகாசம் இல்லை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கலந்தாய்வில் மாற்றம் செய்யப்பட்டு திருத்திய கலந்தாய்வு பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதன் விவரம் ஜன., 31 வரை நடக்கும் கலந்தாய்வில் மாற்றம் இல்லை. பிப்.,1 முதல் நடக்கும் கலந்தாய்வில் பதவி உயர்வு மற்றும் மாறுதல் பெறுவோரை உடன் பணிவிடுவிப்பு செய்யாமல் பிப்., 24ல் விடுவிப்பு செய்ய வேண்டும். அதுவரை அதே மாவட்டத்தில் பணியாற்ற வேண்டும். பிப்.,19ல் நடக்கும் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டு, பிப்.,19 - 22 வரை நடக்கும் கலந்தாய்வு பிப்., 24 - மார்ச் 5 வரை நடக்கும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement