மூணாறு--மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான குண்டு மலை எஸ்டேட் அப்பர் டிவிஷனில் ஜார்கண்ட் , நின்ஜிகல்லைச் சேர்ந்த தொழிலாளி சரண்சாய் 29, கொலை வழக்கை டி.எஸ்.பி. மனோஜ் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.அங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளியான சரண்சாய், அதே மாநிலம் சோனுவா பகுதியைச் சேர்ந்த சக தொழிலாளர்களான டாபியா சாந்தியா, சாதேவ்லோங் ஆகியோருடன் ஜன.23 மது அருந்தினார். சரண்சாயை ஜன.25ல் தேயிலைத் தோட்டத்தில் போலீசார் பிணமாக மீட்டனர். தலையில் வெட்டி, கண்கள் இரண்டும் பறிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்தது பிரேத பரிசோதனையில் தெரிந்தது. மூணாறு டி.எஸ்.பி. மனோஜ் தலைமையில் 9பேர் கொண்ட தனிப்படை விசாரிக்கின்றனர். சரண்சாயுடன் மது அருந்திய சக தொழிலாளர்கள் இருவரும் கொலையில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இருவரும் தலைமறைவானதால் ஜார்கண்ட்டிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அங்கு சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE