புதுச்சேரி: ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பினை மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.
ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிறுவனங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு கமிட்டி முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி, நேற்று முன்தினம் எம்.பி.பி.எஸ்., இடங்களை ஒதுக்கியது.

சென்னை ஐகோர்ட் உத்தரவினை தொடர்ந்து, இந்த ஒதுக்கீடு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதிதாக எம்.சி.சி., இணையதளத்தில் விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது.இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் 28ம் தேதி முதல் 30ம் தேதி மதியம் 12 மணி வரை விண்ணப்பிக்க பதிவு செய்யலாம். 30ம் தேதி மாலை 3 மணி வரை கட்டணத்தை ஆன்-லைனில் கட்டலாம்.கல்லுாரி முன்னுரிமையை 30ம் தேதி மதியம் 11.55 மணி வரை தேர்வு செய்யவும், அதனை 4 மணிக்குள் லாகிங் செய்யவும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
31ம் தேதி சீட் ஒதுக்கீடு துவக்கப்பட உள்ளது. இந்த சீட் ஒதுக்கீடு பிப்ரவரி 1ம் தேதி இறுதி செய்யப்படும். சீட் கிடைத்த மாணவர்கள் அந்தந்த மருத்துவ கல்லுாரிகளில் 2ம் தேதி முதல் 7ம் தேதி மாலை 5 மணி வரை சேர வேண்டும்.இவ்வாறு மருத்துவ கலந்தாய்வு கமிட்டி தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE