திருப்பத்துார் : ராஜிவ் கொலையாளி பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்க சென்னைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரளிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறுநீரக தொற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக பரோலில் விடுதலையாகி, திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருக்கிறார். அவரது தாய் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் தமிழக அரசுக்கு மனு செய்து பரோல் நீட்டிப்பு பெற்று வருகிறார். இதனால் பேரறிவாளனுக்கு எட்டாவது மாதமாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. டாக்டர்களின் ஆலோசனை படி, பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று, வயிறு சம்மந்தமாக சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்தனர். இதனால் வேலுார் ஆயுதப்படை போலீஸ் சூப்பிரமண்ட் மணிமாறன் தலைமையில், 20 க்கும் மேற்பட்ட போலீசார் அவரை இன்று சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்ததும் அவர் ஜோலார்பேட்டைக்கு அழைத்து வரப்படுவார் என போலீசார் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE