கத்தியை காட்டி ஓட்டு கேட்ட காங்., வேட்பாளர்; தி.மு.க., சதியால் 'கம்பி' எண்ணுகிறாரா?
கத்தியை காட்டி ஓட்டு கேட்ட காங்., வேட்பாளர்; தி.மு.க., சதியால் 'கம்பி' எண்ணுகிறாரா?

கத்தியை காட்டி ஓட்டு கேட்ட காங்., வேட்பாளர்; தி.மு.க., சதியால் 'கம்பி' எண்ணுகிறாரா?

Updated : பிப் 09, 2022 | Added : பிப் 09, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன், ஸ்ரீபெரும்புதுார் நகர காங்., நிர்வாகி. ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி 1வது வார்டில் போட்டியிட, பூபாலன் விருப்ப மனு தாக்கல் செய்தார்.தி.மு.க., கூட்டணியில் காங்.,குக்கு மூன்று இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதால், பூபாலனுக்கு 'சீட்' கிடைக்கவில்லை. இதனால் பூபாலன், தன் மனைவி

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன், ஸ்ரீபெரும்புதுார் நகர காங்., நிர்வாகி. ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி 1வது வார்டில் போட்டியிட, பூபாலன் விருப்ப மனு தாக்கல் செய்தார்.தி.மு.க., கூட்டணியில் காங்.,குக்கு மூன்று இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதால், பூபாலனுக்கு 'சீட்' கிடைக்கவில்லை.




latest tamil news


இதனால் பூபாலன், தன் மனைவி தனலட்சுமியை சுயேச்சையாக போட்டியிட வைத்துள்ளார். தனலட்சுமிக்கு தண்ணீர் குழாய் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மனைவிக்கு ஓட்டளிக்க வேண்டும் என, கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டியதாக கூறி ஸ்ரீபெரும்புதுார் போலீசார், பூபாலனை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


ஸ்ரீபெரும்புதுார் காங்., நிர்வாகிகள் கூறியதாவது:பூபாலனுக்கு, மக்கள் செல்வாக்கு உள்ளது. 2010ல் ஸ்ரீபெரும்புதுார் வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.இந்த தேர்தலில் சுயேச்டையாக போட்டியிட்டு, அவர் வெற்றி பெற்று விடுவார் என்பதால், அவரது பெயரை கெடுக்கும் விதமாக தி.மு.க.,வினர் சதிசெய்து, பூபாலனை சிறையில் அடைத்துஉள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.



latest tamil news


ஸ்ரீபெரும்புதுாரில் காங்., - -தி.மு.க.,இடையே பனிப்போர் நிலவுகிறது. காங்., ஏழு 'சீட்' கேட்டும், தி.மு.க., தரப்பில் மூன்று சீட் தான் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இதனால், காங்.,கை சேர்ந்த சிலர், சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (5)

Nagarajan D - Coimbatore,இந்தியா
09-பிப்-202219:51:36 IST Report Abuse
Nagarajan D இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் கட்சியே தேசிய கட்சி அங்கீகாரத்தை இழந்துவிடும் பின்னர் அனைவரும் சுயேச்சை சின்னத்தில் தான் நிற்க வேண்டிவரும்.....
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
09-பிப்-202219:24:06 IST Report Abuse
a natanasabapathy எவ்வளவு அடித்தாலும் காங்கிரஸ்காருக்கு புத்தி வராது நக்கியாவது நான்கு சீட்டை வாங்குவதே லக்ஷியம்
Rate this:
Cancel
Bhakt - Chennai,இந்தியா
09-பிப்-202217:58:30 IST Report Abuse
Bhakt தோழமை சுடுதல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X