கெஜ்ரிவாலை பயங்கரவாதியின் வீட்டில் காணலாம்: ராகுல் தாக்கு

Updated : பிப் 16, 2022 | Added : பிப் 16, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
சண்டிகர்: காங்கிரஸ் தலைவரை பயங்கரவாதியின் வீட்டில் பார்க்கவே முடியாது என்றும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதியின் வீட்டில் காணலாம் எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.பஞ்சாபில் வரும் 20ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ், பா.ஜ., ஆம்ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பர்னாலாவில்
Arvind Kejriwal, Can Be Found, Terrorists Homes, Rahul, Rahul Gandhi, அரவிந்த் கெஜ்ரிவால், பயங்கரவாதி வீடு, ராகுல், விமர்சனம்

சண்டிகர்: காங்கிரஸ் தலைவரை பயங்கரவாதியின் வீட்டில் பார்க்கவே முடியாது என்றும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதியின் வீட்டில் காணலாம் எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.



பஞ்சாபில் வரும் 20ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ், பா.ஜ., ஆம்ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பர்னாலாவில் நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: என்ன நடந்தாலும், காங்கிரசின் தலைவரை ஒரு பயங்கரவாதியின் வீட்டில் பார்க்கவே முடியாது. துடைப்பம் கட்சியின் (ஆம்ஆத்மி கட்சியின் சின்னம்) மிகப்பெரிய தலைவரை பயங்கரவாதியின் வீட்டில் காணலாம். அதுதான் உண்மை. இவ்வாறு அவர் பேசினார்.



latest tamil news

கடந்த 2017ம் ஆண்டு தேர்தலின்போது, பஞ்சாபின் மோகாவில் உள்ள முன்னாள் காலிஸ்தான் பயங்கரவாதியின் வீட்டில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு இரவு தங்கியிருந்ததை குறிப்பிட்டு ராகுல் இந்த விமர்சனத்தை முன்வைத்தார். அவர் மேலும் பேசியதாவது: அரசாங்கத்தை அமைக்க வாய்ப்பு தேடுபவர்கள், பஞ்சாப் மாநிலத்தை சிதைத்துவிடுவர். ஒரு வாய்ப்பு கொடுங்கள் என உங்களுக்கு வாக்குறுதி அளிப்பவர்கள் பஞ்சாபை அழித்து விடுவார்கள். என் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.



பஞ்சாப் ஒரு எல்லை மற்றும் உணர்வுபூர்வமான மாநிலம், காங்கிரஸ் கட்சி மட்டுமே பஞ்சாபை புரிந்து கொண்டு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும். அமரீந்தர் சிங் ஒரு ஏழையைக் கட்டிப்பிடிப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர் அவ்வாறு செய்வதை நான் பார்த்ததில்லை. அமரீந்தர் சிங்குக்கும் பா.ஜ.,வுக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்ததால், அவரை காங்கிரஸ் கட்சி நீக்கியது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

16-பிப்-202218:51:30 IST Report Abuse
பேசும் தமிழன் என்ன தலைவரே எப்போதும் நம்ம ஆட்கள் (கான் கிராஸ்) தானே பயங்கரவாதிகளுக்கு சப்போர்ட் செய்யவோம்... இப்போதுரபேல் என்ன அப்படியே மாற்றி சொல்லி உள்ளீர்கள்.... பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத ஆதரவு கட்சி எது என்றால்... அது கான் கிராஸ் என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும்
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
16-பிப்-202217:35:21 IST Report Abuse
Priyan Vadanad தீவிரவாதம் பற்றி பேசுகிறாரே, ராகுல் காந்தி எப்போது பாஜகவில் சேர்ந்தார்?
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
16-பிப்-202217:18:47 IST Report Abuse
Mayavan Mayavan நீங்க எங்க அங்க போனீங்க. சொந்தக்காரர்களை பார்க்கவா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X