காரைக்கால் : காரைக்காலில் மது பழக் கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காரைக்கால் கோவில்பத்து அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் காளிதாஸ்(49) என்.சி.சி., அலுவலக ஊழியர். இவரது மனைவி செந்தாமரை,
மூன்று பிள்ளைகள் உள்ளனர்.காளிதாஸ் கடந்த சில நாட்களாக அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததை மனைவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த காளிதாஸ் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார். அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நகர போலீசார் விசாரிக்கின்றனர்.