அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : மார் 01, 2022 | Added : மார் 01, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை: மதுரை பரவை, புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை ஊர்மெச்சிகுளம் கலா மீனா உட்பட 8 பேர் தாக்கல் செய்த மனு:பரவை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நாங்கள் அ.தி.மு.க., சார்பில் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றுள்ளோம். தி.மு.க., 6, சுயே.,1 கவுன்சிலர்கள் வென்றுள்ளனர்.பேரூராட்சி

மதுரை: மதுரை பரவை, புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.




latest tamil news


மதுரை ஊர்மெச்சிகுளம் கலா மீனா உட்பட 8 பேர் தாக்கல் செய்த மனு:பரவை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நாங்கள் அ.தி.மு.க., சார்பில் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றுள்ளோம். தி.மு.க., 6, சுயே.,1 கவுன்சிலர்கள் வென்றுள்ளனர்.


பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க., கைப்பற்ற வாய்ப்புள்ளது. அவற்றை ஆளுங்கட்சியினர் கைப்பற்றும் நோக்கில் எங்களுக்கும், குடும்பத்தினருக்கும் சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். 'குதிரை பேரத்தில்' ஈடுபட தடுத்து வைக்க வாய்ப்புள்ளது.

சமயநல்லுார் டி.எஸ்.பி.,யிடம் புகார் செய்தோம். எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.



latest tamil news


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சாலை பொன்னம்மா உட்பட 9 பேர், 'அன்னவாசல் பேரூராட்சியில் அதிக வார்டுகளை அ.தி.மு.க., கைபற்றியுள்ளது. தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றும் நோக்கில் இதர கட்சியினரால் மிரட்டல் வருகிறது. போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என மனு செய்தனர்.

அவசர வழக்காக விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'மனுதாரர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Nellai tamilan - Tirunelveli,இந்தியா
01-மார்-202216:52:14 IST Report Abuse
Nellai tamilan பாதுகாப்புக்கு தமிழக காவல்துறையா? விளங்கிடும்
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
01-மார்-202212:03:18 IST Report Abuse
sundarsvpr போலீஸ் பாதுகாப்பு சில தனிப்பட்ட நபர்களுக்கோ நிறுவனங்களுக்கு வழங்குவது தேவை அற்றது. அரசு பாதுகாப்பை நம்பி செத்து செத்து வாழ்வைதை விட நம் பாதுகாப்பு நாம் கவனித்துக் கொள்ளவேண்டும். மோதல்களுக்கு காரணம் அந்த அந்த சாதிகளுக்கு தகுதியான அதாவது சத்தியத்திற்கு கட்டுப்பட்ட தலைமை தேவை. சாதிகளுக்கு இடையே ஒற்றுமையின்மை தாக்கப்படுவதற்கு காரணம். இது அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X