உக்ரைன் விவகாரம்; ஜனாதிபதி உடன் பிரதமர் மோடி சந்திப்பு

Updated : மார் 01, 2022 | Added : மார் 01, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் 3 முறை ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு (பிப்.,28) வரை உக்ரைனில் இருந்து 5 விமானங்கள் மூலமாக 1,156 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியர்களை
Ukraine Issue, PMModi, President, Ramnath Kovind, Meet, உக்ரைன், பிரதமர், மோடி, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், சந்திப்பு

புதுடில்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.



உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் 3 முறை ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு (பிப்.,28) வரை உக்ரைனில் இருந்து 5 விமானங்கள் மூலமாக 1,156 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியர்களை மீட்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு 4 மத்திய அமைச்சர்களை அனுப்பி, மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


இந்த நிலையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அதில், உக்ரைனுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாகவும், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

Narayanan - chennai,இந்தியா
01-மார்-202212:54:48 IST Report Abuse
Narayanan ஆலோசனை என்பது பல கோணங்களில் இருக்கும் . இந்தியர்களை மீட்பது மட்டுமே வேலை இல்லை . ஆகவே பொறுமை அவசியம் .
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
01-மார்-202212:49:13 IST Report Abuse
N. Srinivasan நாட்டில் எந்த ஒரு பெரிய மற்றும் சிறிய பிரச்சனை என்றால் பிரதம மந்திரி நாட்டின் ஜனாதிபதியிடம் நிலைமையை சொல்லவேண்டும் என்பது மரபு. அதைத்தான் மோடி செய்கிறார்....
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
01-மார்-202212:47:27 IST Report Abuse
radha ரெண்டு பேரும் கொடுத்திருக்கிற ( பூங்கொத்து ) போஸை பாத்தா. ஒண்ணுமே புரியலையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X