பிரதமரின் தாயார் எடைக்கு நிகரான தங்கம்; காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நன்கொடை

Updated : மார் 02, 2022 | Added : மார் 02, 2022 | கருத்துகள் (52) | |
Advertisement
வாரணாசி: பிரதமரின் தாயார் எடைக்கு நிகரான 60 கிலோ தங்கத்தை வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு பிரதமர் மோடியின் தாயாரின் எடைக்கு நிகரான தங்கத்தை தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக
பிரதமரின் தாயார் எடைக்கு நிகரான தங்கம்; காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நன்கொடை

வாரணாசி: பிரதமரின் தாயார் எடைக்கு நிகரான 60 கிலோ தங்கத்தை வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு பிரதமர் மோடியின் தாயாரின் எடைக்கு நிகரான தங்கத்தை தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது. நன்கொடை அளித்தவரின் விவரங்கள் வெளியாகவில்லை. மாறாக, தான் தீவிர மோடியின் ரசிகர் எனவும், பிரதமர் மோடியின் தாயாரான ஹீராபெனின் எடைக்கு நிகரான 60 கிலோ தங்கத்தை அளிப்பதாக நன்கொடையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.



latest tamil news

இதனை வாரணாசி கோட்ட ஆணையர் தீபக் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், ‛பெயர் குறிப்பிட விரும்பாதவரிடம் இருந்து பெறப்பட்ட 60 கிலோ தங்கத்தில், 37 கிலோ கருவறையின் உள் சுவர்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 23 கிலோ பிரதான கட்டமைப்பின் தங்கக் குவிமாடத்தின் கீழ்ப் பகுதியை அலங்கரிக்க பயன்படுத்தப்படும்' என்றார். கடந்த பிப்.,27ல் பிரதமர் மோடி வாரணாசி வந்தபோது, கோவிலின் உள் சுவர்களில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (52)

Sivagiri - chennai,இந்தியா
02-மார்-202221:06:24 IST Report Abuse
Sivagiri ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காசி ஸ்தலம் மிக பெரியதாக உலகிலேயே புனித ஸ்தலமாக இருந்து வருகிறது , அதை 500-சதுர அடிக்குள் சுருங்கியது காங்கிரஸ் , மற்றும் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகள் , இப்போ லட்சம் ச-அடியில் மறு ஜென்மம் எடுத்துள்ளது காசி , , ,
Rate this:
Cancel
g.kumaresan - Chennai,இந்தியா
02-மார்-202220:59:54 IST Report Abuse
g.kumaresan இவர் ஏழை தாய் அல்ல.என் நாட்டின் பிரதமரின் தாய். என் நாட்டிற்கு நல்ல பிரதமரை கொடுத்த தாய்.அவர் பெயரில் எந்த தொலைக்காட்சியும் இல்லை.எந்த கம்பெனியும் இல்லை.பிரதமரின் தாய் ஆட்டோவில் ஆஸ்பத்திரி செல்கிறார்.இதை பார்த்தும் நீங்கள் குறைகூறினால் உங்கள் மனதில், எதோ குறை இருக்கிறது.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
02-மார்-202220:58:02 IST Report Abuse
Sivagiri முன்பெல்லாம் , தீயமுக , தீகவுடன் சேர்ந்து - கோவில் எல்லாம் எதற்கு ? ஒரு பிரயோஜனமும் இல்லை - பள்ளிக்கூடமோ , அட்லீஸ்ட் கக்கூஸோ கட்டினால் கூட பிரயோஜனம் , என்று பேசி திரிந்தார்கள் , பாரதியாரை திரித்து மேற்கோள்காட்டி - ஆலயம் செய்யோம் கல்வி சாலைகள் செய்வோம் என்று , இப்போ கோவில் வருமானத்தில்தான் கவர்ன்மெண்ட் நடக்குது , சொத்துக்களை கொள்ளை அடிக்க ஒரு துறையே ஏற்படுத்தப் பட்டுள்ளது , சொத்துக்கள் இல்லாவிட்ட்டால் கோவிலே , சிலைகள் , காணாமல் போகுது , மற்ற மத யாத்திரைகளுக்கும் , கோவில் காசில் கொடுக்கப் படுகிறது . , இங்கே மட்டும்தான் சமூக நீதி கோஷம் போடப் படுகிறது , , திமுக அமைச்சர்களின் ஸ்கூல் காலேஜ்களில் , பண நீதி மட்டுமே பார்க்கப் படுகிறது , ,
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
03-மார்-202200:10:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்//பள்ளிக்கூடமோ , அட்லீஸ்ட் கக்கூஸோ கட்டினால் கூட பிரயோஜனம்// உன்னோட மனசாட்சி குடையுதுன்னு நினைக்கிறன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X