கார்கிவ் நகரில் 500 இந்தியர்கள் பிணை கைதிகள்: புடின் திட்டவட்டம்

Updated : மார் 03, 2022 | Added : மார் 03, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
உக்ரைனில் இந்தியர்கள் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இந்தியர்கள் பிணை கைதிகள்ரஷ்யா-உக்ரைன் இடையே 8 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருப்பதாவது: உக்ரைனில்உள்ள இந்தியர்களை உக்ரைன்

உக்ரைனில் இந்தியர்கள் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.




latest tamil news




இந்தியர்கள் பிணை கைதிகள்



ரஷ்யா-உக்ரைன் இடையே 8 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருப்பதாவது: உக்ரைனில்உள்ள இந்தியர்களை உக்ரைன் ராணுவம் கேடயமாக பயன்படுத்தி வருகிறது. கைதிகளாக பிடித்து வைத்துள்ளதற்கான அதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது. உக்ரைனின் கார்கிவ் நகரில் சுமார் 500க்கும் மேற்படட இந்தியர்கள் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.


வெளிநாட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்ய ராணுவம் முழு ஒத்துழைப்பை தரும். இவ்வாறு புடின் கூறி உள்ளார். புடினின் இந்த அறிவிப்பை இந்தியா மறுத்துள்ளது.



latest tamil news




அமைதியான வழியில் தீர்வு : பிரதமர்



உக்ரைன் விவகாரம் தொடர்பாக குவாட் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய பிரதமர் மோடி பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியான வழியில் தீர்வுகாண வேண்டும். ஐ.நா., வழிகாட்டி படி அண்டை நாடுகளின் இறையான்மையை மதித்து நடக்க வேண்டும் என கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

venkatan - Puducherry,இந்தியா
04-மார்-202210:05:17 IST Report Abuse
venkatan இப்படியே நம்மை உசுப்பேத்திராப்ல..
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
04-மார்-202208:33:27 IST Report Abuse
Sampath Kumar இந்தியர்கள் யாரும் பிணை கைதிகள் இல்லை என்று நேற்று தான் இந்தியா அறிவித்தது செய்தி தினமலர் போட்டது இன்று அப்படியே தலைக்கீழ் காலக்கொடுமைட சாமீ
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
04-மார்-202206:18:48 IST Report Abuse
rajan உக்ரைன் ராணுவ வீரர்களின் உடையில் இருக்கும் ரஷ்ய படைகளிடம் இந்தியர்கள் பிணைக்கைதிகளாக உள்ளனரா என்பது சிந்திக்கவேண்டிய ஒன்று பிரச்னையை திசை திருப்ப புடின் தந்திரமாக இருக்கலாம்
Rate this:
மணி - புதுகை,இந்தியா
04-மார்-202211:58:20 IST Report Abuse
மணிஆமா ஆமா..உக்ரைன் ராணுவத்தினர் எம்பி காலால் இந்திய மாணவர்களை உதைத்தது கூட கிராபிக்சா இருக்கலாம், லைவில் மாணவர்கள் போடும் வீடியோ கூட ரசிய ராணுவத்தினர் மாறுவேடம்போட்டுக்கொண்டு செய்வதாய் இருக்கலாம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X