நடிகை கடத்தப்பட்ட வழக்கு : நடிகர் திலீப் மனு தள்ளுபடி

Updated : மார் 08, 2022 | Added : மார் 08, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கொச்சி : 'நடிகை கடத்தப்பட்டு, பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதியளிக்க கூடாது' என கோரி நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை, கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2017 பிப்ரவரியில் கேரளாவில், பிரபல நடிகை ஒருவர், கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட ஏழு பேர் கைது
நடிகை கடத்தப்பட்ட வழக்கு : நடிகர் திலீப் மனு தள்ளுபடி

கொச்சி : 'நடிகை கடத்தப்பட்டு, பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதியளிக்க கூடாது' என கோரி நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை, கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2017 பிப்ரவரியில் கேரளாவில், பிரபல நடிகை ஒருவர், கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். திலீப் தற்போது, 'ஜாமினில்' உள்ளார்.



latest tamil news


வழக்கு , எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடந்தது வருகிறது. இதற்கிடையே, இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த அனுமதி கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றப்பதிவு செய்யப்பட்டுவிட்டது.ஒரேயொரு சாட்சியிடம் மட்டும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது.

தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில், கூடுதல் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதியளிக்க கூடாது' என, கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை, நீதிபதி கவுசர் எடப்பாகத் தள்ளுபடி செய்தார். இந்த வழக்கில் அனைத்து விசாரணையையும், ஏப்., 15க்குள் முடிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

SELVAN - SALEM,இந்தியா
09-மார்-202207:08:41 IST Report Abuse
SELVAN ஏன்டா அந்த நடிகையை பாலியல் தொந்தரவும் செய்துவிட்டு விசாரணை செய்ய வரும் போலீஸ்காரர்களை கொல்ல ஆளும் அனுப்புவாய்,விசாரணை செய்ய கூடாது என்று மனுவும் போடுவியா ? நீ எவ்வ்ளோபெரிய கேடி என்று பாலச்சந்திரகுமார் டைரக்டர் சொல்லிவிட்டார்.கேரளாவில் மிகப்பெரிய தாதாவாக காட்டிக்கொள்பவன் தானே நீ ? போட போயி ஜெயிலில் கிட .
Rate this:
Cancel
Logical Indian - Chennai,யூ.எஸ்.ஏ
09-மார்-202204:16:17 IST Report Abuse
Logical Indian ...
Rate this:
Cancel
sam - Alaska,யூ.எஸ்.ஏ
08-மார்-202220:43:52 IST Report Abuse
sam Some people voluntarily invite lord SHANI to their house.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X