சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 151 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 418 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (மார்ச். 07 ம் தேதி) 158 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று (மார்ச் 08 ம் தேதி) பாதிப்பு 151 ஆக குறைந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 40,884 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 150 பேரும் மேற்குவங்கம் மாநிலம் சென்று திரும்பிய ஒருவரையும் சேர்த்து 151 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,51,322 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,47,95,497 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 86 பேர் ஆண்கள், 65 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 20,14,398 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 14,36,886 ஆகவும் அதிகரித்து உள்ளது. 418 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,11,158 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட் பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில்
இருவர் உயிரிழந்துள்ளனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,019 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 56 ஆக இருந்த நிலையில் இன்று (மார்ச் 08 ம் தேதி) 51 ஆக குறைந்துள்ளது.
மாவட்ட வாரியாக விபரம்

