மாபெரும் புத்தகப்பூங்கா அமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

Updated : மார் 15, 2022 | Added : மார் 15, 2022 | கருத்துகள் (38) | |
Advertisement
சென்னை: அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துளார்.சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின்
மாபெரும் புத்தகப்பூங்கா அமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துளார்.



சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:


தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மிகவும் எழுச்சியோடும், உணர்ச்சியோடும் இந்த விழாவை நடத்தி கொண்டு இருக்கிறோம்.



latest tamil news


3,500 ஆண்டுகள் பழமையான இனம் தமிழ் இனம். அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புத்தகப் பூங்கா உருவானால், அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களை ஒரே இடத்தில் சந்திக்கும் சூழல் உருவாகும். தமிழர்களை அதிகாரம் பொருந்திய அனைத்து இடங்களிலும் அமர வைத்தது திமுக ஆட்சி தான். திமுக ஆட்சியை தமிழ் ஆட்சியாக, தமிழர்களின் ஆட்சியாக நடத்திக்கொண்டு இருக்கிறோம்; நாங்கள் என்று சொல்வது உங்கள் அனைவரையும் சேர்த்துதான். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (38)

Aarkay - Pondy,இந்தியா
16-மார்-202200:59:22 IST Report Abuse
Aarkay சத்தியமாய் அங்கு இருக்கப் போவதென்னவோ திராவிட விஷமிகளின் இந்துமத துவேஷ நூல்களும், தகரமுத்துவின் பிதற்றல்களும்தான். நம் வரிப்பணம் வீணாய் அவர்களுக்கு செல்லப்போகின்றது.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
15-மார்-202218:08:11 IST Report Abuse
RaajaRaja Cholan நமக்கு தான் தூண்டு சீட்டு மத்தவங்கலாவது படிக்கட்டும் என்று நல்ல எண்ணம் , அல்லது அதில் வரும் ஒப்பந்தம் மூலம் பல நூறு கோடி கொள்ளையடிக்க , வேறு என்ன தெரியும் நமக்கு
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-மார்-202217:55:23 IST Report Abuse
J.V. Iyer மாபெரும் புத்தகப்பூங்காவின்மீது ஆர்வம் வருவதற்கு உங்களில் ஒருவன் புத்தகம்தான் காரணம் என்றால் அது மிகை ஆகாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X