'அலுவலக நேரங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது'
'அலுவலக நேரங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது'

'அலுவலக நேரங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது'

Updated : மார் 16, 2022 | Added : மார் 15, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
மதுரை: அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்த கூடாது எனவும், இது தொடர்பாக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.திருச்சி சுகாதாரத்துறை பணிமனை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ராதிகா. இவர் பணியிடங்களில் சக ஊழியர்களை தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் பணியிட நீக்கம்
'அலுவலக நேரங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது'

மதுரை: அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்த கூடாது எனவும், இது தொடர்பாக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி சுகாதாரத்துறை பணிமனை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ராதிகா. இவர் பணியிடங்களில் சக ஊழியர்களை தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ராதிகா மனு அளித்திருந்தார். மதுரை உயர் நீதிமன்ற கிளையில், ராதிகா மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.



ஐகோர்ட் அதிரடி உத்தரவு

latest tamil news

அரசு ஊழியர்களின் இதுபோன்ற செயல்பாடுகளை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. ஒருவேளை ஏதேனும் அவசரமெனில் முறையான அனுமதி பெற்று செல்போனை பயன்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தமிழக சுகாதாரத்துறைச் செயலர் இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள்ளாக இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தவேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (21)

kumar - nandhivaram,இந்தியா
17-மார்-202207:51:13 IST Report Abuse
kumar லஞ்சத்தில் இயங்கும் அரசு அலுவலுகங்களை சீர்திருத்தம் செய்யணும். லஞ்சம் வாங்கும் யாராயிருந்தாலும் உடனடியாக வேலையை விட்டு துரத்தப்படுவார்கள் எனவும் கணக்கில் வராத பணம் நகை வீடு நிலம் மற்றும் இதர சொத்துக்கள் அனைத்தும் அரசு கஜானாவுக்கு உடனடியாக கொண்டு வரப்படும் எனவும் அரசு ஊழியர்களுக்கு சட்டம் கொண்டு வரணும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-மார்-202206:16:24 IST Report Abuse
Mani . V சும்மா காமெடி.
Rate this:
Cancel
Chandrasekaran - al khobar,சவுதி அரேபியா
16-மார்-202200:51:36 IST Report Abuse
Chandrasekaran நல்ல தீர்ப்பு. அதே சமயம் லஞ்சம் வாங்குவதை அழிக்க நீதி மன்றம் பரிந்துரைத்தால் நன்றாக இறுக்கம். லஞ்சம் தலை தூக்கி ஆடுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X