பாக்.,கில் தவறுதலாக விழுந்த இந்திய ஏவுகணை; ராஜ்நாத் சிங் விளக்கம்
பாக்.,கில் தவறுதலாக விழுந்த இந்திய ஏவுகணை; ராஜ்நாத் சிங் விளக்கம்

பாக்.,கில் தவறுதலாக விழுந்த இந்திய ஏவுகணை; ராஜ்நாத் சிங் விளக்கம்

Updated : மார் 15, 2022 | Added : மார் 15, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: பாகிஸ்தானில் தவறுதலாக இந்திய ஏவுகணை விழுந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார்.ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் இருந்து ஏவுகணை ஒன்று சமீபத்தில் பாகிஸ்தான் நிலப்பரப்பில் தவறுதலாக விழுந்தது. இது தொடா்பாக விசாரணை நடத்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்
பாக்.,கில் தவறுதலாக விழுந்த இந்திய ஏவுகணை; ராஜ்நாத் சிங் விளக்கம்

புதுடில்லி: பாகிஸ்தானில் தவறுதலாக இந்திய ஏவுகணை விழுந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார்.

ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் இருந்து ஏவுகணை ஒன்று சமீபத்தில் பாகிஸ்தான் நிலப்பரப்பில் தவறுதலாக விழுந்தது. இது தொடா்பாக விசாரணை நடத்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாக்., கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது: இந்திய ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்றது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும்.



latest tamil news

ஏவுகணை அமைப்பு மிகவும் நம்பகமானது, பாதுகாப்பானது என்பதை நான் இந்த சபைக்கு உறுதியளிக்கிறேன். பாதுகாப்பு நடைமுறைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. நமது ஆயுதப் படையினர் நன்கு பயிற்சி பெற்றவர்கள், ஒழுக்கமானவர்கள். அத்தகைய அமைப்புகளை கையாள்வதில் நன்கு அனுபவம் பெற்றவர்கள். ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது பின்னர்தான் தெரிந்தது. எனினும் இச்சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டதுடன் உயர்மட்ட விசாரணைக்கு அதிகாரப்பூர்வ உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

N.K - Hamburg,ஜெர்மனி
15-மார்-202218:53:30 IST Report Abuse
N.K இது ஒன்றும் விபத்து அல்ல. பாக்கின் ஏவுகணை எதிர்ப்பு கருவிகளின் பலவீனத்தை வெட்டவெளிச்சம் ஆக்கும் செயலோ என்று தோன்றுகிறது. 120 கிமி ஒரு பொருள் அவர்கள் எல்லைக்குள் சென்றுள்ளது, அதுவே அவர்களுக்கு தாமதமாகத்தான் தெரிகிறது. சீன தளவாடங்கள் நிலை இதுதான்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
15-மார்-202218:42:55 IST Report Abuse
NicoleThomson இனி நமது எல்லைக்குள் தீவிரவாதிகளை அனுப்பினால் ஏவுகணைகளும் அவர்களுக்கு அனுப்பி வைப்போமே?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-மார்-202218:16:57 IST Report Abuse
Kasimani Baskaran போட்டதுதான் போட்டார்கள் தவறுதலாக அணுக்குண்டை போட்டிருந்தால் தீவிரவாத பிரச்சினையாவது நிரந்தரமாக தீர்ந்திருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X