வருமான வரி வசூல் உயர என்ன காரணம்?
வருமான வரி வசூல் உயர என்ன காரணம்?

வருமான வரி வசூல் உயர என்ன காரணம்?

Updated : மார் 19, 2022 | Added : மார் 19, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி :வரலாறு காணாத வகையில் வருமான வரி வசூல் உயர நான்கு முக்கிய காரணங்கள் உள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.நடப்பு, 2021 - 22ம் நிதியாண்டில் ஏப்., - மார்ச் 16 வரை தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்திய வருமான வரி, இதுவரை இல்லாத வகையில், 13 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ஜே.பி.மொஹபத்ரா
வருமான வரி வசூல் உயர என்ன காரணம்?

புதுடில்லி :வரலாறு காணாத வகையில் வருமான வரி வசூல் உயர நான்கு முக்கிய காரணங்கள் உள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

நடப்பு, 2021 - 22ம் நிதியாண்டில் ஏப்., - மார்ச் 16 வரை தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்திய வருமான வரி, இதுவரை இல்லாத வகையில், 13 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ஜே.பி.மொஹபத்ரா கூறியதாவது:
வரலாறு காணாத வகையில் வருமான வரி வசூல் உயர நான்கு காரணங்கள் உள்ளன.


latest tamil news


முதலாவது, இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனால் வரி வசூல் அதிகரித்துள்ளது. அடுத்து, அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் பயனாக வரி வசூல் உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக வருமான வரித் துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் தற்போது பயன் அளிக்கத் துவங்கியுள்ளன.

நான்காவதாக, வருமான வரித் துறையின் தகவல் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டதை கூறலாம். இதனால், ஒருவர் ஓராண்டில் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனைகளை வருமான வரி வலைதளத்தில் சுலபமாக அறிந்து, அதற்கேற்ப தன்னிச்சையாக வரி செலுத்த முடிகிறது. நடப்பு மார்ச் 16 நிலவரப்படி, வருமான வரி வசூல், 13 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் 54 ஆயிரம் கோடி முதல் 55 ஆயிரம் கோடி ரூபாய் வரை தான் வருமான வரித் துறை 'நோட்டீஸ்' அனுப்பி வசூலித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

Ramaswami Sampath - mumbai,இந்தியா
21-மார்-202215:27:10 IST Report Abuse
Ramaswami Sampath அநியாய வரி விதித்தால் மக்கள் கட்டித்தான் ஆக வேண்டும். கடந்த ஐந்து வருஷத்தில் நடுத்தர மக்களுக்கு எந்த வருமான வரி சலுகையும் கொடுக்கவில்லை. விலைவாசி ரொம்ப உயர்ந்து விட்டது. கேட்காமலே கார்போரேட்டுகளுக்கு வரி குறைக்கப்பட்டது. ஏனென்றால் அவர்கள் தேர்தல் நிதி தருவார்கள் ஏழைகளுக்கு இலவச ரேஷன் கொடுத்தால் வோட்டு கிடைக்கும்.அதிகம் அவதி படுவது மாத சம்பளக்காரர்கள் மட்டுமே .
Rate this:
Cancel
20-மார்-202216:02:52 IST Report Abuse
Ambalavanan Gomathinayagam வருமானவரி வரம்பு ஆண்டுகளுக்காக உயர்த்தபடாததாலும்.வங்கி, மற்ற நிறுவன சேமிப்பு வண்டிகளுக்கு வரி பிடிப்பதாலுமே.இதனால் ரீபண்டும் அதிகரித்து உள்ளது
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
20-மார்-202212:46:23 IST Report Abuse
chennai sivakumar அதெல்லாம் ஒன்னும் இல்லை. மோடி govt மாட்டிக்கிட்டால் சுளுக்கு எடுத்து விடும் என்ற பயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X