டேராடூன்: உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
உத்தரகண்ட் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., 47 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்க வைத்தது. சமீபத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், புஷ்கர் சிங் தாமி மீண்டும் முதல்வராக பதவியேற்று கொண்டார்.
இந்நிலையில், டேராடூனில் நடந்த விழாவில் இரண்டாவது முறையாக புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியேற்று கொண்டார்.

அவருடன் சத்பால் மகாராஜ், பிரேம்சந்த் அகர்வால், கணேஷ் ஜோஷி, தான் சிங் ராவத், சுபோத் உன்யால், ரேகா ஆர்யா, சந்தன் ராம்தாஸ், சவுரப் பகுகுணா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உத்தரகண்ட் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்..
