திருக்கழுக்குன்றம்:அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர், அரசு பஸ்சில் மது அருந்தி கும்மாளம் அடித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்த களத்துாரில் புகழேந்தி புலவர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு திருக்கழுக்குன்றம், வல்லிபுரம் சுற்று வட்டார மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவ - மாணவியர் சிலர், செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும், அரசு மாநகர பஸ்சில் நேற்று முன்தினம் மாலை பயணித்தனர்.
அப்போது, மாணவர்கள் தயாராக வைத்திருந்த, 'பீர்' பாட்டிலை எடுத்ததும், மாணவியர் அதை வாங்கி குடித்து கும்மாளம் அடித்தனர். 'குடிச்சா வாசனை வருமாடி' எனக் கேட்டு, ஒவ்வொருவராக குடித்தனர். பத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பீர் குடித்து, பஸ்சில் அட்டகாசம் செய்தது, சக பயணியரிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இவர்கள் பீர் குடிக்கும் செயலை, மொபைல் போனில் வீடியோவாக பதிவிட்டு, சமூக வலை தளங்களில் பரவ விட்டுள்ளனர். இதைப் பார்த்து, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த வீடியோ குறித்து, கல்வித் துறையினரும், திருக்கழுக்குன்றம் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE