பொது சிவில் சட்டம் அமல் : உத்தரகண்ட் அரசு அனுமதி?

Added : மார் 25, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
டேராடூன் : உத்தரகண்டில், பொது சிவில் சட்டத்தை விரைந்து அமல்படுத்துவதற்காக, சட்ட நிபுணர்கள் குழுவை அமைக்க, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.உத்தரகண்டில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, மாநில முதல்வராக நேற்று முன்தினம் புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றார். அவர், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி
பொது சிவில் சட்டம், : உத்தரகண்ட் ,அனுமதி?

டேராடூன் : உத்தரகண்டில், பொது சிவில் சட்டத்தை விரைந்து அமல்படுத்துவதற்காக, சட்ட நிபுணர்கள் குழுவை அமைக்க, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


உத்தரகண்டில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, மாநில முதல்வராக நேற்று முன்தினம் புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றார். அவர், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்ததால், அடுத்த ஆறு மாதங்களில், ஏதேனும் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்நிலையில், முதல்வர் தாமி தலைமையில், முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொது சிவில் சட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாநிலத்தில், பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்காக, சட்ட நிபுணர்கள் குழுவை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


latest tamil news

தேர்தல் பிரசாரத்தின்போது, மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை, தாமி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

25-மார்-202215:02:14 IST Report Abuse
சம்பத் குமார் 1). வாழ்த்துக்கள் மற்றும் வரவேற்கத்தக்கது. please go ahead without any hesitation.2). தொடங்குங்கள். மற்ற மாநிலங்கள் உங்களை பின் தொடரும்.3). கூடிய விரைவில் இது இந்தியா முழுவதும் அமலாகும் என எதிர்ப்பார்ப்போம். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-மார்-202212:57:31 IST Report Abuse
raja வாழ்த்துக்கள் ஆரமித்து வையுங்கள்....இங்கே தமிழகத்தில் திரு அண்ணாமலை அவர்கள் தலைமையில் அமரபோகும் BJP ஆட்சியில் அமல்படுத்தப்படும்...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-மார்-202210:31:49 IST Report Abuse
duruvasar ஏ கே ராஜன் தலைமையில் குழு அமையுங்கள். எந்த புள்ளி விவரமும் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. எண்ணி 30 நாளில் தாங்கள் விரும்பிய அறிக்கை கிடைத்துவிடும். அப்பறம் சட்ட சபையில் தீர்மானம் போடவேண்டியதுதான் பாக்கி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X