" பீர் குடிக்கும் மாணவிகள்" - இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் ? ராமதாஸ் வேதனை

Added : மார் 25, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
சென்னை: பஸ்சில் மாணவிகள் பீர் குடித்து சென்ற சம்பவம் சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற கலாச்சார சீரழிவு தனது மனதை வாட்டுவதாக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.மாணவிகள் மது குடிக்கும் சீரழிவைத் தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை


சென்னை: பஸ்சில் மாணவிகள் பீர் குடித்து சென்ற சம்பவம் சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற கலாச்சார சீரழிவு தனது மனதை வாட்டுவதாக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.



அரசு சந்திக்க போகும் சீரழிவுகள் என்னென்ன சொல்கிறார் ராமதாஸ்

latest tamil news



மாணவிகள் மது குடிக்கும் சீரழிவைத் தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

''செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிச் சீருடையில் அரசுப் பேருந்தில் நின்றுகொண்டு மது அருந்தி , ரகளை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. படிக்க வேண்டிய மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு ரகளை செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

அந்தக் காணொலியைப் பார்க்கும் பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும். பள்ளிகளுக்குச் செல்லும் தங்களின் குழந்தைகளும் இத்தகைய சீரழிவுகளுக்கு ஆளாகி விடுவார்களோ? என்ற அச்சமும், கவலையும் அவர்களை வாட்டும். இந்தியாவின் எதிர்காலத் தூண்களாக உருவாக வேண்டியவர்கள், உருப்படாமல் போய்விடுவார்களோ? என்ற கவலை ஆசிரியர்களை அலைக்கழிக்கும்.

பொது வெளியில் மது அருந்துவதும், காலியான மதுப்புட்டிகளை சாலைகளில் வீசி உடைப்பதையும்தான் சாகசங்கள் என்று திரைப்படங்கள் கற்பிக்கின்றன. இத்தகைய காட்சிகள் இளைய தலைமுறை மத்தியில் எத்தகைய சீரழிவை ஏற்படுத்தும் என்பது குறித்த அக்கறை திரைத்துறையினருக்கு இல்லை. கதைக்கு இத்தகைய காட்சிகள் அவசியம் என்று சிலர் அதை நியாயப்படுத்தவும் செய்கின்றனர். அக்காட்சியின் போது 'மது குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது' எச்சரிக்கை வாசகத்தைக் காட்டிவிட்டால், அதுவே பாவத்திற்கான பரிகாரமாகி விடும் என அவர்கள் நினைக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். சீரழிவுக்குத் துணை போகும் சில திரைத்துறையினரும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

அவர்களையும் கடந்த பொறுப்பு அரசுக்குத்தான் வர வேண்டும். 2003ஆம் ஆண்டில் மதுக்கடைகள் அரசுடைமையாக்கப்பட்ட பின்னர் தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை விட பெரும் துரோகம் எதுவும் இருக்க முடியாது. வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் நூலங்களும், ஆலயங்களும் இருக்கின்றனவோ, இல்லையோ.... மதுக்கடைகள் இருக்கின்றன. மதுக்கடைகளைக் கடந்துதான் கிட்டத்தட்ட அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.


latest tamil news


முன்னொரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்தான் இருந்தன. அதனால் மது என்ற சாத்தான் குறித்து மாணவர், மாணவியருக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது மது மிகவும் எளிதாகவும், தாராளமாகவும் கிடைப்பதுதான் மாணவச் செல்வங்களின் சீரழிவுக்குக் காரணம்.

மதுவை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் அரசை நடத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் வரை தமிழகத்தில் இத்தகைய சீரழிவுகளைத் தவிர்க்க முடியாது. மதுவில் மூழ்கும் தமிழகத்தையும், எதிர்காலத் தலைமுறையினரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் உடனடியாக தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (44)

Anand - chennai,இந்தியா
25-மார்-202218:32:54 IST Report Abuse
Anand கேடுகெட்ட விடியல் ஆட்சி....
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
27-மார்-202204:20:08 IST Report Abuse
சாண்டில்யன்பிஜேபி ஆளும் பங்களூருவில் மதுபானம் வாங்க இளம் பெண்கள் கியூவில் நின்ற போட்டோ வந்ததே...
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
29-மார்-202218:21:29 IST Report Abuse
Neutralliteபெங்களூரு வில் தனியார் விற்பனை Mr.Sai MK. அதை தடுத்தால் தனி நபர் சுதந்திரம் போச்சு, நாங்க என்ன குடிக்கணும்னு அரசு சொல்லக்கூடாதுன்னு நீங்க போராடுவீங்க. தமிழ்நாட்டுல அரசு விற்பனை. அது தான் வித்யாசம்...புரியாத மாதிரி ஒரு பதில் போட்டு வெச்சுர வேண்டியது.....
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
25-மார்-202218:27:08 IST Report Abuse
Rajasekaran ஒரு காலத்தில் இளைஞர்கள் , சிகரட் குடிக்கும் போதுகூட , அக்கம் பக்கம் தெரிந்தவர்கள் யாராவது பார்க்கிறார்களா என்று தயங்கி தயங்கி குடிப்பார்கள் . மது அருந்துதல் மேட்டுக்குடி வர்க்கத்தினர் மத்தியிலேயே , அதற்காக சந்தா அதிகமுள்ள விடுதிகளில் ( கிளப் ) மட்டுமே நடக்கும் இப்போது தான் எதிலும் ஆணுக்கு பெண் சரிநிகர் வயது ஒரு பொருட்டல்ல என்ற கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக , மற்றும் மனிதனின் மன வக்கிரங்களை தூண்டி விட பல திரைப்படங்களும் , வசனங்களும் , பாடல் , ஆடல் காட்சிகளும், உடைகளும் என்று சமூகத்தை சீரழித்துக் கொண்டேயிருக்கின்றனவே ? ராமதாஸ் அவர்கள் , பலருடைய மௌனமான, மனக்குமுறலை வாய் விட்டு சொல்லியிருக்கிறார் சம்பத்தப்பட்ட பெற்றோர்கள் தங்களுக்கு உள்ள சமுதாய பொறுப்புணர்வுடன் தங்கள் பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்த்தால் மட்டுமே இந்த நோய் நம்மை விட்டு அகலும்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா
25-மார்-202218:01:44 IST Report Abuse
Vijay D Ratnam இதுக்கே ரொம்ப கவலைப்படாதீங்க டாக்டர். விரைவில் வெளிநாடுகளில் இருப்பது போல சூப்பர் மார்க்கெட்டில் மதுவகைகள் விற்கும் காலம் வரப்போகிறது. பொறவு பாருங்க. எங்கள் சூப்பர் மார்க்கெட்டில் ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் ஒரு குவார்ட்டர் இலவசம், ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வாங்கினால் ஒரு ஹாஃப் இலவசம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்கி வாங்கினால் ஒரு ஃபுல் இலவசம் என்று விளம்பரம் அதகளப்படும். பொருளாதாரம் வளரணும்ல. நிறைய பேருக்கு வருமானம் வரும்ல. அரசியல்வாதிகள், பார் நடத்துபவர்கள், ஆட்டோ, ஆம்புலன்ஸ், டாக்டர்கள், ஃபார்மசி, இன்சூரன்ஸ், வக்கீல், அடியாட்கள் இப்படி எத்தனை பேருக்கு பொழப்பு ஓடும். குடிச்சிட்டு யார் பொண்டாட்டி கிட்டேயாவது தவறாக நடந்துகொண்டாலோ அல்லது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாலோ கோர்ட் கேஸ் தாண்டி மீடியா, நடந்தது என்ன என்று ப்ரோக்ராம், மனித உரிமை, மாட்டு உரிமை என்று வாய்ச்சவடால் பார்ட்டிங்க எல்லாம் செம்ம பிசியாக இருப்பாய்ங்கல்ல. இந்த லோலாயிகள் நடக்குற சமயத்துல மீடியா அரசின் நடவடிக்கைகள், அத்து மீறல்கள், கொள்ளைகள் குறித்தெல்லாம் செய்தி வெளியிடாமல் டைவர்ட் பண்ணுமல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X