பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயமாக்க எதிர்ப்பு
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயமாக்க எதிர்ப்பு

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயமாக்க எதிர்ப்பு

Updated : மார் 25, 2022 | Added : மார் 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி : 'பள்ளி செல்லும் குழந்தைகள், சுய விருப்பத்தின் அடிப்படையில் முக கவசம் அணிய வேண்டுமே தவிர, அதை கட்டாயமாக்கக் கூடாது' என வலியுறுத்தி, டில்லியை சேர்ந்த ஒரு மாணவனின் தாய், 'ஆன்லைன்' வாயிலாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.கொரோனா பரவல் கணிசமாக குறைய துவங்கியுள்ளதை அடுத்து, அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. 'மாணவர்கள் அனைவரும்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயமாக்க எதிர்ப்பு

புதுடில்லி : 'பள்ளி செல்லும் குழந்தைகள், சுய விருப்பத்தின் அடிப்படையில் முக கவசம் அணிய வேண்டுமே தவிர, அதை கட்டாயமாக்கக் கூடாது' என வலியுறுத்தி, டில்லியை சேர்ந்த ஒரு மாணவனின் தாய், 'ஆன்லைன்' வாயிலாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.



கொரோனா பரவல் கணிசமாக குறைய துவங்கியுள்ளதை அடுத்து, அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. 'மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லியை சேர்ந்த ஒரு மாணவனின் தாய், கட்டாய முக கவச உத்தரவுக்கு எதிராக, ஆன்லைன் வாயிலாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.



இதற்காக, கோரிக்கை மனு ஒன்றை தயார் செய்துள்ள அவர், அதில் பெற்றோர் கையொப்பத்தை பெற்று வருகிறார். இந்த மனுவை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அனுப்ப முடிவு செய்துஉள்ளார்.



latest tamil news


மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தொற்று பரவலின் விகிதம், குழந்தைகளின் வயதை கணக்கில் கொள்ளாமல், பள்ளிக்கு வரும் அனைத்து குழந்தைகளும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு, சர்வதேச வழிகாட்டலுக்கு எதிரானது. குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே, 5 - 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, பள்ளியில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கக் கூடாது.



சுய விருப்பத்தின் அடிப்படையில் அவர்கள் முக கவசம் அணிய வேண்டும்.கோடை காலத்தில் தொடர்ச்சியாக முக கவசம் அணிவது, பாக்டீரியா, பூஞ்சை போன்ற வேறு தொற்றுக்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்தக் கூடும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
25-மார்-202216:15:19 IST Report Abuse
R.Kumaresan R.Kumaresan. இந்தியாவில் வைரஸ் தொற்று நோய் பரவல் நின்றதாகத் தெரியவில்லை. பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் முகக்கவசம் அணிந்தாலும் அணியாவிட்டாலும் வைரஸ் நோய் தொற்று வந்தாலும் வந்ததுதான். வைரஸ் நோய் தொற்று பரவல் நின்றிருந்தால் முகக்கவசத்தை அணிவதையாவது நிறுத்தி வைக்கலாம்..R.Kumaresan. தமிழ்நாட்டில் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் முகக்கவசம் அணிவாதாகத்தெரியவில்லை..R.Kumaresan.
Rate this:
Cancel
mukundan - chennai,இந்தியா
25-மார்-202216:07:18 IST Report Abuse
mukundan 5-11 வயது குழந்தைகளுக்கு ஏது சுய விருப்பம்? குழந்தைகள் தொற்றால் பாதிக்க பட்டால் அது மறுபடியும் பெரியவர்களை தான் தாக்கும்.
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
25-மார்-202212:45:06 IST Report Abuse
தத்வமசி இதே வாய் நாளைக்கு குழந்தைக்கு பள்ளியில் ஏதாவது நடந்து விட்டால் அப்படியே திருப்பி பேசும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X