உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைத்ததா ரஷ்யா?
உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைத்ததா ரஷ்யா?

உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைத்ததா ரஷ்யா?

Added : மார் 29, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
வாஷிங்டன் : ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதி பேச்சில் ஈடுபட்ட ரஷ்ய தொழிலதிபர் மற்றும் உக்ரைன் குழுவை சேர்ந்த இருவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில், இரு நாட்டு பிரதிநிதிகள் குழு இடையே அமைதி பேச்சு நடந்து வருகிறது. பல்வேறு சுற்று பேச்சில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.உக்ரைன் அரசின் வேண்டுகோளை

வாஷிங்டன் : ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதி பேச்சில் ஈடுபட்ட ரஷ்ய தொழிலதிபர் மற்றும் உக்ரைன் குழுவை சேர்ந்த இருவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.




latest tamil news

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில், இரு நாட்டு பிரதிநிதிகள் குழு இடையே அமைதி பேச்சு நடந்து வருகிறது. பல்வேறு சுற்று பேச்சில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.உக்ரைன் அரசின் வேண்டுகோளை ஏற்று, ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிக் இந்த அமைதிப் பேச்சில் பங்கேற்று உக்ரைனுக்கு ஆதரவாக பேசி வந்தார்.


latest tamil news


இந்நிலையில், தொழிலதிபர் ரோமன் மற்றும் உக்ரைன் அமைதி குழுவை சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளுக்கு கடந்த மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அமெரிக்காவின், 'வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.



அதில், மூவருக்கும் கண்கள் சிவந்து, முகம் மற்றும் கைகளில் தோல் பகுதி உரிய துவங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த பேச்சின் போது இவர்களுக்கு விஷம் வைக்கப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. தற்போது அவர்கள் உடல்நிலை தேறி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (9)

பைரவர் சம்பத் குமார் 1). பிரச்சினைக்கு மூன்றுபேரை பேர் காரணமாக சொல்லலாம்.. ஒன்று உக்ரைன் காமெடி வில்லன் ஜெலன்சிகி மற்றும் அமெரிக்கா தாத்தா ஜோபிடன் மற்றும் பரட்டை மாமா இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.2). வெஸ்டர்ன் நாடுகளின் மீடியாக்கள் வரித்துக் கட்டிக் கொண்டு பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். 3). என்னடா இது காமெடிக்கு வந்த சோதனை??? 4). உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்யா விஷம் எடுத்துக் கொண்டு போய் சாவகாசமாக விஷம் கலந்தமாதிரிமும் அதை உக்ரைன் அரசு லைட் போட்டு வீடியோ எடுத்த கதையா இருக்கு.5). நம்மூரில் ஒரு பழமொழி இருக்கும் அதாவது கேக்கறவன் கேனையனா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளான் Drive பண்ணுச்சாம். நல்ல கதை சாமி இது. நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
29-மார்-202212:08:39 IST Report Abuse
THANGARAJ ரஷ்யா இது செய்து இருக்க வாய்ப்பு இல்லை. அமெரிக்காவின் வேலையாக தான் இருக்கும். பிரிக்க முடியாதது எது என்றால் போர் மற்றும் அமெரிக்கா. அமெரிக்காவிற்கு நிறைய ஆதாயம் இருக்கு. போர் முடிந்து விட்டால் அமெரிக்காவின் மதிப்பு குறைந்து விடும் / இராணுவ தளவாடங்கள், ஏவுகணைகள் தொழில் மற்றும் வியாபாரம் ஆகாது. பாவம் உக்கிரைன்
Rate this:
Cancel
29-மார்-202210:43:13 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ரஷ்யா அப்படி செய்யக்கூடிய நாடுதான்... நேருஅங்கிள் நேதாஜியை ரஷ்ய ஸ்டாலினிடம் ஒப்படைத்தது இதற்காகத்தான் ..
Rate this:
Viswam - Mumbai,இந்தியா
29-மார்-202217:54:38 IST Report Abuse
Viswamஅதே மாதிரி லால் பகதூர் சாஸ்திரியையும் தாஷ்கெண்டுலே வச்சு செஞ்சாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X