வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : நடப்பாண்டில் 3101 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐ.சி.எப். சாதனை படைத்துள்ளது.
சென்னையில் உள்ள ஐ.சி.எப். எனும் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் 'வந்தே பாரத்' ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. மேலும் 'வந்தே பாரத்' ரயில் பெட்டி தயாரிப்பு திட்டத்தில் பெட்டிகள் தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.தொடர் சிக்கல்ஐ.சி.எப்.பில் 2019 - 2020ல் 4238 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கொரோனா ஊரடங்காலும் ரயில் பெட்டி தயாரிப்பு தளவாடங்கள் இயந்திரங்கள் உதிரிப்பாகங்கள் தட்டுப்பாட்டாலும் 4166 பெட்டிகளே தயாரிக்க முடிந்தது. இதேநிலை தொடர்ந்ததால் 2020 -2021ம் ஆண்டில் 1954 பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.இந்த நிலையில் 2021 - 2022ம் ஆண்டில் 3678 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தளவாடங்கள் உரிய காலத்தில் கிடைக்காததால் 3100 பெட்டிகள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. தயாரிப்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டன

ரயில்களில் நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் 'லிங் ஹாப்மென் புஸ்' என்கிற எல்.எச்.பி. பெட்டிகள் அதிகம் சேர்க்கப்பட்டு வருவதால் இப்பெட்டிகள் அதிகம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி நிர்ணயித்திருந்த இலக்கைவிட 1 பெட்டி கூடுதலாக 3101 பெட்டிகள் தயாரித்து ஐ.சி.எப். சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பெட்டிகள் விபரம்
இந்திய ரயில்வேக்கு, எல்.எச்.பி., பெட்டிகள், 2,639; மெமூ ரயில் பெட்டிகள், 248. மின்சாரம் மற்றும் டீசலில் இயங்கும் பவர் கார் ரயில் பெட்டிகள், 50; ரயில் பாதை ஆய்வு ரயில் கார் பெட்டிகள், 18; கோல்கட்டா மெட்ரோவுக்கு, 32 பெட்டிகள், இலங்கைக்கு, எக்ஸ்பிரஸ் மற்றும் டெமூ ரயில் பெட்டிகள், 109, 'ஸ்பிக்' நிறுவனத்துக்கு ஐந்து பெட்டிகள் என, மொத்தம் இவ்வாண்டு, 3,101 பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE