மங்கலதேவி கண்ணகி கோயிலை மீட்க வேண்டும்: பா.ஜ., வலியுறுத்தல்

Updated : ஏப் 09, 2022 | Added : ஏப் 09, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
கூடலூர்: ''மங்கலதேவி கண்ணகி கோயிலை கேரள அரசிடம் இருந்து மீட்டு சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ,''என ,பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.மங்கலதேவி கண்ணகி கோயிலின் அடிவாரத்தில் உள்ள பனியன்குடியில் வனப்பாதையை பார்வையிட்ட பின் அவர் கூறும்போது:தேனிமாவட்டம் கூடலூர் பளியன்குடியில் இருந்து 6 கி.மீ., தொலைவில்


கூடலூர்: ''மங்கலதேவி கண்ணகி கோயிலை கேரள அரசிடம் இருந்து மீட்டு சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ,''என ,பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.



latest tamil news



மங்கலதேவி கண்ணகி கோயிலின் அடிவாரத்தில் உள்ள பனியன்குடியில் வனப்பாதையை பார்வையிட்ட பின் அவர் கூறும்போது:தேனிமாவட்டம் கூடலூர் பளியன்குடியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் உள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இதன் முகப்பு வாயில் மதுரையை நோக்கி அமைந்துள்ளது. 1817ல் கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயிலும், 1976 ல் தமிழக--கேரள அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சர்வேயிலும் இக்கோயில் தமிழகப் பகுதியில் அமைந்துள்ளதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தாண்டு ஏப்.16 ல் சித்ரா பவுர்ணமி விழா நடக்க உள்ளது.இக்கோயிலுக்குச் செல்லும் ஜீப் பாதை கேரள வனப்பகுதி வழியாக இருப்பதால் கோயிலை கேரளா உரிமை கொண்டாடி வருகிறது. தமிழக வனப்பகுதியில் இருந்து 6 கி.மீ., தூரம் தற்போதுள்ள நடைபாதையில் ரோடு வசதி ஏற்படுத்தினால் தமிழக பக்தர்கள் தடை இன்றி சென்று வர வாய்ப்பு ஏற்படும். கோயில் பராமரிப்பின்றி அழியும் நிலையில் உள்ளது.


latest tamil news



கேரள அரசிடம் இருந்து இக்கோயிலை முழுமையாக மீட்டு சீரமைப்பு பணிகள் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும், என்றார்.மாவட்ட விவசாய சங்க தலைவர் எஸ்.ராஜசேகர், சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, தலைவர் வெங்கடேசன், கோட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
09-ஏப்-202222:13:36 IST Report Abuse
Ramesh Sargam ஒருவேளை அந்த கோவிலை மீட்கத்தான் கேரளா போயிருக்கிறாரோ நமது முதல்வர்... இல்ல, மொத்தமா அவங்களுக்கு வித்துட்டு வர போயிருக்கிறாரோ...
Rate this:
Cancel
09-ஏப்-202221:04:35 IST Report Abuse
அப்புசாமி அந்த கோவிலை செப்பனிட்டு வசதிகள் செய்து குடுத்தால், சபரிமலை, திருப்பதி ரேஞ்சுக்கு வருமானம் பார்க்கலாம். கண்ணகி போன்ற தெய்வங்கள் ஒருகாலத்தில் உயிருடன் வாழ்ந்தவை. இங்கே தமிழக, மலையாள அரசியல்வாதிகள் ஒருத்தனை ஒருத்தன் உருட்டி விடத்தான் லாயக்கு.
Rate this:
Cancel
09-ஏப்-202218:32:46 IST Report Abuse
ஆரூர் ரங் சொரியாருக்கு கற்பு என்ற வார்த்தையே பிடிக்காது 😛பின்னர் கண்ணகிக்கு கோயில் என்றால் எப்படி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X