மதுரை:மதுரை - தெலுங்கானாவுக்கு ஏப்., 11 (நாளை) முதல் சிறப்பு வாராந்திர ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.இதன்படி செகந்திராபாத்தில் இருந்து ஏப்., 11, 18, 25 ஆகிய திங்கள் கிழமைகளில் இரவு 9:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8:45 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து ஏப்., 13, 20, 27 ஆகிய புதன் கிழமைகளில் காலை 5:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:25 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்துார், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லுார், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.