ஊரடங்கின் போது மது விருந்து : பிரிட்டன் பிரதமருக்கு அபராதம்

Updated : ஏப் 12, 2022 | Added : ஏப் 12, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
லண்டன் :கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, தன் அலுவலகத்தில் மது விருந்து நடத்தியதற்காக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கும், நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும், லண்டன் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் 2020ம் ஆண்டில், கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருந்த போது, ஜூன் 19ல் பிரதமர் போரீஸ் ஜான்சனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இதையொட்டி
ஊரடங்கின் போது மது  விருந்து  : பிரிட்டன் பிரதமருக்கு அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லண்டன் :கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, தன் அலுவலகத்தில் மது விருந்து நடத்தியதற்காக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கும், நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும், லண்டன் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் 2020ம் ஆண்டில், கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருந்த போது, ஜூன் 19ல் பிரதமர் போரீஸ் ஜான்சனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இதையொட்டி லண்டனில் உள்ள அவரது அலுவலகத்தில் மது விருந்து நடந்தது, அதில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


latest tamil news



கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி, மது விருந்து நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து லண்டன் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விதிமுறைகளை மீறி, மது விருந்து நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த ஆண்டு துவக்கத்தில், பார்லிமென்டில் போரீஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி, பிரதமர் போரீஸ் ஜான்சன், நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோருக்கு. லண்டன் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு 'நோட்டீஸ்'அனுப்பியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
13-ஏப்-202209:20:02 IST Report Abuse
அசோக்ராஜ் அந்தப் பிரதமருக்கு ஏதோ நம்ம கடலூர் பக்கம் பூர்வீகமாம். டாஸ்மாக்கு ஜீன் கொஞ்சம் வேலை செய்யாமலா இருக்கும்?
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
13-ஏப்-202203:29:05 IST Report Abuse
Matt P பிரிட்டிஷ் காரர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் நடத்துவது என்பதை தெரிந்தோம் . அவர்கள் வழி முறைகளே வேறு மாதிரி இருக்கிறது. நம்ம வூர்ல காவல் அதிகாரி எழுந்து கய் கட்டி வாய்பொத்தி நிற்க , ( குறிப்பாக எந்த முதலமைச்சரயம் குறைவாக சொல்லும் எண்ணம் இல்லை.) முதலமைச்சர் அவர் இருக்கையில் அமர்ந்து பஞ்சாயத்து நடத்துவது அல்லவா நடக்கிறது...எம் எல் ஏ , எம்பிக்கள் போனாலும் இந்த சீர் தான்.திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின் ம் நேர்மைக்கு மாறாக ஆட்சியாளர்களே தவறு செய்கிறார்கள் என்பது உண்மை.
Rate this:
Cancel
ஆக .. - Chennai ,இந்தியா
12-ஏப்-202222:33:05 IST Report Abuse
ஆக .. அந்த சமயத்தில் குழந்தைக்கு தந்தையானார் ..அதுக்கு தனியா அபராதம் போடணும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X