கொரோனா பரவல் வேகமெடுக்குமா? ஐ.சி.எம்.ஆர்., ஆராய்ச்சியாளர் தகவல்!

Updated : ஏப் 30, 2022 | Added : ஏப் 30, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி :“புதிய வகை கொரோனா வைரஸ் எதுவும் உருவாகவில்லை. எனவே, நம் நாட்டில் வைரஸ் பரவல் வேகமெடுக்க வாய்ப்பில்லை,” என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் நிவேதிதா குப்தா தெரிவித்துள்ளார். ஆறாம் அலை நம் நாட்டில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,
கொரோனா பரவல் வேகம் ஐ.சி.எம்.ஆர்.,ல ஆராய்ச்சியாளர் ல

புதுடில்லி :“புதிய வகை கொரோனா வைரஸ் எதுவும் உருவாகவில்லை. எனவே, நம் நாட்டில் வைரஸ் பரவல் வேகமெடுக்க வாய்ப்பில்லை,” என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் நிவேதிதா குப்தா தெரிவித்துள்ளார்.


ஆறாம் அலை


நம் நாட்டில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின், வைரஸ் ஆய்வு பிரிவின் தலைவர் டாக்டர் நிவேதிதா குப்தா நேற்று கூறியதாவது:


latest tamil news


இந்தியாவில், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கு செலுத்தப்படும் 'கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்' தடுப்பூசிகளால் தான், இது சாத்தியமானது. ஹாங்காங், கனடா நாடுகளில், கொரோனா பரவலின் ஐந்து மற்றும் ஆறாம் அலை சென்று கொண்டிருக்கிறது. இந்த நாடுகளில், கொரோனாவை கட்டுப்படுத்த முறையான திட்டங்கள் வகுக்கப்படாதது தான் இதற்கு காரணம்.


'பூஸ்டர் டோஸ்'



நம் நாட்டில், ஒமைக்ரான் வகைகளை தவிர, மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் எதுவும் பரவவில்லை. எனவே, வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க வாய்ப்பில்லை. எனினும், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்வது ஆகியவற்றை நாம் முறையாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.'பூஸ்டர்' டோஸ்களை, குறைவான மக்களே செலுத்திக் கொள்கின்றனர். இது, நல்ல அறிகுறி அல்ல. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ்களை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

01-மே-202201:02:01 IST Report Abuse
அப்புசாமி பூஸ்டர் காசு குடுத்து போட்டுக்கணுமாமே... ஆ.. ஊ ந்னா அமெரிக்காங்கறவங்க, அங்கே பூஸ்டர் தடுப்பூசி இலவசம்னு அறியாதவங்களா?
Rate this:
Cancel
Yesappa - Bangalore,இந்தியா
30-ஏப்-202210:37:37 IST Report Abuse
Yesappa வயதானவர்களை டாக்டரிடம் கூட்டிச்சென்றால் கேட்கும் முதல் கேள்வியே தடுப்பூசி போட்ட முன்பு பிரச்சனை இருந்ததா இல்லை பிறகு வந்ததா என்பதுதான்?. பூஸ்டர் முடிந்தவரை அவாய்ட் செய்ய சொல்லுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X