ஜெய்பீம் பட விவகாரம்: நடிகர் சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

Updated : மே 05, 2022 | Added : மே 05, 2022 | கருத்துகள் (50) | |
Advertisement
சென்னை: ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்பட்ட வழக்கில் படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா - ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள்
Jaibhim, Suyra, Jyothika, Case File, Court, ஜெய்பீம், சூர்யா, ஜோதிகா, இயக்குனர், ஞானவேல், வழக்கு, நீதிமன்றம், உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்பட்ட வழக்கில் படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா - ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் புகார் அளித்தார். ஆனால் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‛தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் ஜெய்பீம் படத்தில் காட்சிகள் இருப்பதாகவும், வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும்' குறிப்பிட்டிருந்தார்.



latest tamil news

இந்த வழக்கு இன்று (மே 5) விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜோதிகா- சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முதல் தகவல் அறிக்கையை மே 20ல் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்து.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (50)

TRUBOAT - Chennai,இந்தியா
06-மே-202200:09:36 IST Report Abuse
TRUBOAT சென்சார் போர்டு தணிக்கை செய்த பின் இத்தனை பேர் ஒரு படத்துக்கு எதிராக கிளம்புவது சென்சார் போர்டின் தேவையை கேள்விக்குறியாக்குகிறது.... ஒரு சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் ஒவவொரு படத்திலும், ஏதாவது ஒரு காரணம் கிடைக்கும் இந்த கொதித்தெழும் கும்பலுக்கு. சமீப காலமாக சகிப்புத்தன்மை என்பது மக்களிடையே மிகவும் குறைந்து வருகிறது.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
05-மே-202220:44:52 IST Report Abuse
சீனி விடியல் ஆட்சியில் ஊரே பத்தி எரிஞ்சு சாம்பலானப்புறம்தான், தீர்ப்பு வரும். ஆனாலும், இந்தமாதிரியான கிரிப்டோ சினிமா கும்பலுக்கு சட்ட ரீதியாக மக்கள் ஆப்படிக்கவேண்டும். இளையராஜா, பாக்கியராஜ், கங்கை அமரன், ராதா ரவி, மணிரத்னம், சுஹாசினி போன்றவர்கள் ஏன் மோதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர், எப்படி இந்த சூரிய கம்பெனியும், கிரிப்டோ கும்பலும் சினிமாவில் இருந்து இவர்களை ஓரம்கட்டினர் என மக்கள் சிந்திக்கவேண்டும்.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
05-மே-202220:33:09 IST Report Abuse
Suri /////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X