ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள சர்ச் பாதிரியார் ஜோசப் ராஜா, 49.இந்த சர்சுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண் தொடர்ச்சியாக வந்து சென்றுள்ளார். அவரின் மன வளர்ச்சி குன்றிய, 14 வயது மகளும் அவருடன் அங்கு வருவது உண்டு. அப்போது, அந்த சிறுமிக்கு, ஜோசப் ராஜா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமியின் உடலில் காயங்களை கண்ட அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, ராஜபாளையம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிந்து, பாதிரியார் ஜோசப் ராஜாவை, 'போக்சோ' எனப்படும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE