விழுப்புரம்: விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கியில் இடைக்கால தலைவர் தேர்வு செய்தது செல்லாது என பொது மேலாளர் (பொறுப்பு) குமார் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் வங்கி தலைவரின் அனுமதியின்றி கடந்த 7ம் தேதி, இடைக்கால தலைவராக ஒரு சில இயக்குனர்கள் சேர்ந்து தனுசை தேர்வு செய்து, கூட்டம் நடத்தி 14 தீர்மானங்களை நிறைவேற்றினர். இந்நிலையில், நகர கூட்டுறவு வங்கியின் இடைக்கால தலைவராக தனுசை தேர்வு செய்தது செல்லாது. மேலும், அன்று நிறைவேற்றிய தீர்மானமும் செல்லாது என வங்கி பொது மேலாளர் (பொறுப்பு) குமார் அறிவித்துள்ளார். மேலும், இன்று 13ம் தேதி மாலை 5:00 மணிக்கு, வங்கியின் தலைவர் தங்க சேகர் தலைமையில் மீண்டும் நிர்வாகக் குழுக் கூட்டம் நடக்கிறது. இதில், 14 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்து, அதற்கான தீர்மான நகல்கள் வங்கியின் தலைவர், துணை தலைவர், இயக்குனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE