கடலுார் : கடலுார் அரசு மருத்துவமனையில், உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.
கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் (பொறுப்பு) கண்ணன் வரவேற்றார். மேயர் சுந்தரி ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துணை மேயர் தாமரைச்செல்வன், மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா கலந்து கொண்டனர்.
விழாவில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, செவிலியர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். செவிலியர் பயிற்சி பள்ளி ஆசிரியர் முருகவேணி நன்றி கூறினார்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
அரசு மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் கீதா, நளினி தலைமையில் கேக் வெட்டி செவிலியர் தினத்தை கொண்டாடினர். செலியர்கள் இந்துமதி, ரூபி, சந்தியா, ராஜலட்சுமி, பூங்குழலி, ஸ்ரீமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ரோட்டரி கிளப் செயலாளர் செந்தமிழ் செல்வி ஏற்பாடு செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE