சேலம்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறியதாவது: தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றியுள்ளது. ஆனால், 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பொய் கூறுகின்றனர். கொரோனா காலத்தில் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமல், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சோதனையான நேரத்தில் சொத்து வரி உயர்வு என்ற மிகப்பெரிய சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். இது மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம். ஏற்கனவே, சொத்து வரி உயர்வை தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement