சேந்தமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட பச்சுடையாம்பட்டி புதுார் அருந்தியர் காலனியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. அங்கு அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகுறித்து பஞ்., நிர்வாகத்திடமும், யூனியன் அலுவலகத்திலும், பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் கடந்த, 4 மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்யாததால், சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் சாலையில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன், நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஏ.பி.டி.ஓ., பாஸ்கர், ஆர்.ஐ.,தங்கராஜ், வி.ஏ.ஓ., சத்தியசீலன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்ட பெண்கள், யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த பஞ்., தலைவர் திலகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறையினர், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு நாட்களில் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE