கெங்கவல்லி, நடுவலுார் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில், 100 குடியிருப்புகள் உள்ளன. அந்த கட்டடங்கள் சேதமடைந்துள்ளது. அதில், 48 குடியிருப்புகளுக்கு தலா, 2.34 லட்சம் ரூபாய், மீதி குடியிருப்புகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி, பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
மறு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கி பணி மேற்கொள்ள, கடந்த மாதம், சேலம் கலெக்டர், கெங்கவல்லி பி.டி.ஓ., அலுவலகத்தில், மக்கள் மனு அளித்தனர். ஆனால் மறு ஆய்வு செய்யாமல், 48 வீடுகளில், முதல் கட்டமாக பராமரிப்பு பணி மேற்கொள்ள, ஒப்பந்ததாரர் உள்ளிட்ட பணியாளர்கள், நேற்று வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமத்துவபுர மக்கள், கெங்கவல்லி - ஆத்துார் சாலையில், மண்ணெண்ணெய் கேனுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், பி.டி.ஓ., செல்வம், போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது, மீண்டும் ஆய்வு செய்த பின் பணி மேற்கொள்வதாக, தாசில்தார் உறுதியளித்தார். பின், மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து, பி.டி.ஓ., செல்வம் தலைமையில் அலுவலர்கள், வீடுதோறம் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை, கலெக்டருக்கு அனுப்புவதாக தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE