ஏற்காட்டில் கடந்த மார்ச்சில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, சந்தைப்பேட்டை அருகே உள்ள, 54 கடைகள் ஏலம், கடந்த மாதம் ஒன்றிய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சாலையோர கடை வியாபாரிகள், அந்த கடைகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்த, ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம், நேற்று மீண்டும் ஏலம் நடப்பதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், அந்த கடைகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை அதிகமாக உள்ளதாக, சாலையோர வியாபாரிகள், பி.டி.ஓ., முருகனிடம் முறையிட்டனர். அவர், 'மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த தொகையை குறைக்க எனக்கு அதிகாரம் இல்லை. அறிவித்தபடி ஏலம் நடக்கும்' என கூறினார்.
ஆனால் முதலீடு தொகை கட்டியிருந்த, 600க்கும் மேற்பட்டோர், தொகையை குறைத்தால் மட்டும் ஏலத்தில் பங்கேற்போம் எனக்கூறி புறக்கணித்து விட்டனர். இதனால் ஏலம் கோர யாரும் வராததால், மீண்டும் தேதி குறிப்பிடாமல், ஊராட்சி நிர்வாகம் ஏலத்தை ஒத்திவைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE