வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.
சேலம், சன்னியாசிகுண்டை சேர்ந்த கூலித்
தொழிலாளி பிரபு, 40. இவர், கடந்த, 10 இரவு, 7:30 மணிக்கு, பஜாஜ் சி.டி., 100 பைக்கில், கிச்சிப்பாளையம், குருவி பனை ஏரி சாலையில், ஜெய்நகர் அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, எதிரே பைக்கில் வந்தவர், இரும்பு கம்பிகளை எடுத்து வந்தார். அந்த கம்பி, பிரபுவின் கண் பகுதியை குத்தியது. இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து விழுந்த அவரை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், நேற்று முன்தினம் மதியம், அவர் உயிரிழந்தார். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், சேலம் - பெங்களூரு சாலையில், கரும்பாலை பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, 45 வயது மதிக்கத்தக்கவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, ஓமலுாரில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி மோதியதில், அவர் உயிரிழந்தார்.
வெள்ளக்கல்பட்டி வி.ஏ.ஓ., செந்தில்நாதன், 42, புகார்படி, கருப்பூர் போலீசார், லாரி டிரைவரான, கோவை, காரமடையை சேர்ந்த மகேஷ், 27, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE