பள்ளிபாளையத்தில் சாயஆலை கழிவுநீர் செல்லும் நீர்நிலைகளில், ஈரோடு பறக்கும்படை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாதிரி சேகரித்தனர்.
பள்ளிபாளையத்தில் ஆவத்திபாளையம், சமயசங்கிலி, வசந்தநகர், அக்ரஹாரம், களியனுார், ஆண்டிக்காடு மற்றும் பல பகுதியில் ஏராளமான சாயஆலைகள் செயல்படுகின்றன. இதில் ஒரு சில தவிர, பெரும்பாலானவை விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன. இதிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக, ஓடை, வடிகால் மற்றும் ஆற்றிலும் கலக்கிறது.
இதனால் தண்ணீர் மாசடைந்து, இதை பயன்டுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயிமும் பாதிக்கப்படுகிறது. மாசுகட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், இன்னும் சாயஆலைகள் செயல்படுகின்றன. கழிவுநீரும் நீர்நிலைகளில் செல்கின்றன.
இந்நிலையில், நேற்று மாசுக்கட்டுபாடு வாரிய, ஈரோடு பறக்கும்படை அதிகாரி மணிவண்ணன் தலைமையில்
அதிகாரிகள், பள்ளிபாளையத்தில் சாயகழிவுநீர் செல்லும் ஆவத்திபாளையம், சில்லாங்காடு, களியனுார், உள்ளிட்ட, ஐந்து நீர்நிலை ஓடைகளிலும் மற்றும் ஆற்றுபகுதியிலும் ஆய்வு செய்து, தண்ணீர் மாதிரி சேகரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE